Tuesday, July 26, 2011

நோய்களுக்கான காரணங்கள்

இக்காலத்தில் உடல்நலம் இல்லை என்றால் உடன் பெரிய மருத்துவ மனைகளுக்குச் செல்கிறோம்.  இருக்கவே இருக்கிறது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.  எனவே அச்சப்படுவதில்லை.  பெரிய பெரிய மருத்துவரைப் பார்க்கச் செல்கிறோம்.  ஆனால் இறைவன் என்னும் பெரிய மருத்துவரை உள்ளம் உருக முதலில் நினைக்க வேண்டும்.  முற்பிறவியில் அறிந்தோ அறியாமலோ ஏதாவது தவறு இழைத்து அதன் காரணமாக இப்பிறவியில் நோய் வந்திருந்தால் தவறைப் பொறுத்து நோயைத் தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்ட வேண்டும்.

முற்பிறவியில் பெரியவர்களையும் ஆசானையும் நிந்தித்து இருந்தால் துன்புறுத்தி இருந்தால் காச நோய் ஏற்படும்.

பிறர் உணவைத் திருடி மற்றவர்கள் பசியால் வாடுவதை வேடிக்கை பார்த்திருந்தால் இப்பிறவியில் உடல் இளைத்தே காணப்படும். 

பெரியவர்களைக் கொல்லுதல், பெண்களை அவமரியாதை செய்தல், மிகவும் தெரிந்தவர்களுக்கே விஷம் கொடுத்து அவர்களைக் கொல்லுதல் இப்படி கொடுஞ் செயல்களைப் புரிந்திருந்தால் வெண்குஷ்டம் வரும்.

பொய் சாட்சி கூறினால் முகத்தில் நோய் வரும்.

பிறர் சொத்தை அபகரித்தால் - அதுவும் கோவில் சொத்தை அபகரித்தால் மூலநோய் அவசியமாக வரும்.

நன்றி மறந்தால் - பிறர் மனைவியைத் தவறான கண்ணோட்டத்துடன் கண்டால் கண் நோய் ஏற்படும்.

பிறரைப் பற்றி இல்லாதது பொல்லாதது கூறி புறம்கூறுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தால் காது நோய் உண்டாகும்.

ஆசிரியரைத் தண்டித்தாலும் பிறர் உணவைத் திருடினாலும் நீரிழிவு நோய் வரும்.

காய்கனிகளைத் திருடினால் - மற்றவரை அவமானப் படுத்தினால் உடலில் புண்கள் உண்டாகும்.

இப்படி முற்பிறவியில் நாம் செய்த தவறுகளுக்குத் தண்டனையாக இப்பிறவியில் நோய்கள் உண்டாகின்றன என்று பெரியோர் கூறுகின்றனர்.  எனவே மருத்துவரைப் பார்ப்பதோடு இறைவனிடம் முறையிட்டு அறிந்தோ அறியாமலோ இப்பிறவியிலோ முற்பிறவியிலோ தவறுகள் செய்திருந்தால் மன்னிக்கும்படியும் அப்படிப்பட்ட தவறுகளை இனி செய்யாமல் தடுக்கும் படியும் இறைவனிடம் முறையிடுங்கள்.  இறைவன் மனமிரங்கினால் நோய்கள் உடனடியாகத் தணியும்.  இறைவனிடம் கையேந்துங்கள்.  அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

No comments:

Post a Comment