Friday, January 21, 2011

இறைவன் திருப்புகழைப் போற்றுதல்

இறைவன் திருப்புகழைப் போற்றுதல்
இந்த க-யுகத்தில் நாம் பிறவிப் பெருங்கட-னைக் கடக்க ஒரு அற்புதமான உபாயம் உள்ளது.
இறைவனின் திருநாமங்களைப் போற்றிப் புகழ வேண்டும்.  முன்பெல்லாம் தவம் செய்வார்கள் - வேள்விகள் செய்வார்கள் - பூசைகள் செய்வார்கள்.  ஆனால் இந்த க-யுகத்தில் இறைவனை அடைய - பிறவிக்கடலை நீந்திக் கரை சேர - அதை விட எளிமையான வழி இறைவனின் திருநாமங்களைப் போற்றிப் புகழ்வது தான்.
சரி எப்படிச் சொல்ல வேண்டும் இந்த நாமங்களை.  அமைதியான காடாக இருந்தால் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக மனதில் உச்சரியுங்கள் இறைவன் திருநாமங்களை -திருப்புகழை.
ஆரவாரமான சூழ-ல் உள்ள நகராக இருந்தால் நீங்களும் வெட்கப்படாமல் குரல் ஓங்க உச்சரியுங்கள்.  கூச்சத்தைப் போக்கிவிடுங்கள்.  இறைவனின் திருநாமத்தைச் சொல்ல நமக்கு என்ன கூச்சம்.
நடனகோபாலநாயகி என்னும் மதுரை மாநகரம் தந்த மகான் - சொராஷ்ட்ர மொழியில் அருமையாகப் பாடி உள்ளார்.  அதன் தமிழாக்கத்தைத் தருகிறேன்.  படியுங்கள்.
நாளும் ஹரி பஜனை செய்க
நல்ல வழி இதுவே இவ்வுலகில் - ஸ்ரீ
அச்சுதா கோவிந்தா என்று அதனை
ஓங்கிய குர-ல் வெட்கத்தை விட்டு
உரக்க உச்சரிக்கப் புறப்படு.
ஆயிரம் திருநாமம் கொண்ட இறைவனின் புகழை
ஒரு திருநாமத்தையாவது கூறிப் படியுங்கள் - பாடுங்கள் - நினையுங்கள் - வந்தியுங்கள்
அப்படிச் செய்த மாத்திரத்தில் நீங்கள் நரக வேதனை தரும் இன்னல்களி-ருந்து விடுபடலாம்.
எத்தனை தவங்கள் செய்தாலும் பலனில்லை
இறைவனின் ஒரு நாமத்தைக் கூறினால் பாபங்கள் அழியும்
கணக்குளதோ வால்மீகி செய்த பாபங்களுக்கு
இராமநாமத்தின் மகிமையால் அவை யாவும் அழிந்தனவே
எழும் போதும் - அமரும் போதும் - நடந்திடும் போதும் - உறங்கும் போதும்
இறைவனைத் தொழும் எண்ணத்தை வளர்த்திடு
இறைவனின் திருநாமத்தைக் கூறு
இப்படி பலபல கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார் நடனகோபால நாயகி சுவாமிகள்.
இறைவன் இருக்கின்றானா என்று வினா எழுப்புவர்கள் ஏராளம் -
இறைவனைப் போற்றினால் எல்லா இடங்களிலும் இறைவன் இருந்து நம்மைக் காப்பான்.
தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று கூறிய பிரகலாதன் என்றும் வாழும் வரலாறு படைத்தான்.