Showing posts with label prayer to god. Show all posts
Showing posts with label prayer to god. Show all posts

Friday, January 21, 2011

இறைவன் திருப்புகழைப் போற்றுதல்

இறைவன் திருப்புகழைப் போற்றுதல்
இந்த க-யுகத்தில் நாம் பிறவிப் பெருங்கட-னைக் கடக்க ஒரு அற்புதமான உபாயம் உள்ளது.
இறைவனின் திருநாமங்களைப் போற்றிப் புகழ வேண்டும்.  முன்பெல்லாம் தவம் செய்வார்கள் - வேள்விகள் செய்வார்கள் - பூசைகள் செய்வார்கள்.  ஆனால் இந்த க-யுகத்தில் இறைவனை அடைய - பிறவிக்கடலை நீந்திக் கரை சேர - அதை விட எளிமையான வழி இறைவனின் திருநாமங்களைப் போற்றிப் புகழ்வது தான்.
சரி எப்படிச் சொல்ல வேண்டும் இந்த நாமங்களை.  அமைதியான காடாக இருந்தால் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக மனதில் உச்சரியுங்கள் இறைவன் திருநாமங்களை -திருப்புகழை.
ஆரவாரமான சூழ-ல் உள்ள நகராக இருந்தால் நீங்களும் வெட்கப்படாமல் குரல் ஓங்க உச்சரியுங்கள்.  கூச்சத்தைப் போக்கிவிடுங்கள்.  இறைவனின் திருநாமத்தைச் சொல்ல நமக்கு என்ன கூச்சம்.
நடனகோபாலநாயகி என்னும் மதுரை மாநகரம் தந்த மகான் - சொராஷ்ட்ர மொழியில் அருமையாகப் பாடி உள்ளார்.  அதன் தமிழாக்கத்தைத் தருகிறேன்.  படியுங்கள்.
நாளும் ஹரி பஜனை செய்க
நல்ல வழி இதுவே இவ்வுலகில் - ஸ்ரீ
அச்சுதா கோவிந்தா என்று அதனை
ஓங்கிய குர-ல் வெட்கத்தை விட்டு
உரக்க உச்சரிக்கப் புறப்படு.
ஆயிரம் திருநாமம் கொண்ட இறைவனின் புகழை
ஒரு திருநாமத்தையாவது கூறிப் படியுங்கள் - பாடுங்கள் - நினையுங்கள் - வந்தியுங்கள்
அப்படிச் செய்த மாத்திரத்தில் நீங்கள் நரக வேதனை தரும் இன்னல்களி-ருந்து விடுபடலாம்.
எத்தனை தவங்கள் செய்தாலும் பலனில்லை
இறைவனின் ஒரு நாமத்தைக் கூறினால் பாபங்கள் அழியும்
கணக்குளதோ வால்மீகி செய்த பாபங்களுக்கு
இராமநாமத்தின் மகிமையால் அவை யாவும் அழிந்தனவே
எழும் போதும் - அமரும் போதும் - நடந்திடும் போதும் - உறங்கும் போதும்
இறைவனைத் தொழும் எண்ணத்தை வளர்த்திடு
இறைவனின் திருநாமத்தைக் கூறு
இப்படி பலபல கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார் நடனகோபால நாயகி சுவாமிகள்.
இறைவன் இருக்கின்றானா என்று வினா எழுப்புவர்கள் ஏராளம் -
இறைவனைப் போற்றினால் எல்லா இடங்களிலும் இறைவன் இருந்து நம்மைக் காப்பான்.
தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று கூறிய பிரகலாதன் என்றும் வாழும் வரலாறு படைத்தான்.